News March 17, 2024

திருச்சி ரயில்வே முக்கிய அறிவிப்பு

image

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ஏற்றுக்கொள்ளப்படாத காரணங்களுக்காக தொடர்ந்து அபாய சங்கிலியை இழுப்பதாக புகார் வருகிறது. மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும், சங்கிலி இழுப்பு சம்பவங்கள் ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில் அது தண்டனைக்குரியதாக கருதப்படும் என எச்சரித்துள்ளது.

Similar News

News October 24, 2025

திருச்சி: ஆளை விழுங்கிய கடன்

image

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் எலக்ட்ரீசியன் கடை நடத்தி வரும் ஜோசப் ராஜ் என்பவர் கடன் பிரச்சனை காரணமாக நேதாஜி நகரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 23, 2025

திருச்சி: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் குறித்த அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (அக்.24) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மணப்பாறை 11, 23 ஆகிய வார்டுகளிலும், திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை பகுதியிலும், மணிகண்டம் கோனார் சத்திரம் பகுதியிலும், முசிறி ஏவூர் பகுதியிலும், மணப்பாறை ஆலகவுண்டம்பட்டி பகுதியிலும், மருங்காபுரி ஊனையூர் பகுதியிலும் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News October 23, 2025

திருச்சி: வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு

image

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி திருமழபாடி சாலையில் சேகர் என்பவர் வீட்டின் மேல் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு இருந்துள்ளது. இதனை கண்ட சேகர் புள்ளம்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று பாம்பை உயிருடன் மீட்டு, வனப்பகுதியில் விட்டனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

error: Content is protected !!