News March 17, 2024
சற்றுமுன்: தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு எம்.பி., எம்.எல்.ஏ., நிதி ஒதுக்கீடு தொடர்பாக தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துவிட்டதால், புதிய திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கக்கூடாது. எந்தவொரு திட்டங்களையும் தங்கள் தொகுதிகளில் தொடங்கக்கூடாது என அறிவுறுத்திய தேர்தல் ஆணையம், தொகுதிகளில் ஏற்கெனவே தொடங்கி நடைபெறும் பணிகளை தொடரலாம் என்று அறிவித்துள்ளது.
Similar News
News November 1, 2025
இசை நிகழ்ச்சியில் ₹24 லட்சம் மதிப்புள்ள போன்கள் அபேஸ்!

உலகப் புகழ் பெற்ற பாப் பாடகர் என்ரிக் இக்லெசியாஸ் சமீபத்தில் மும்பையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இதில் வித்யா பாலன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பிரபலங்களுடன், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். மக்கள் என்ரிக்கின் இசையில் திளைத்துக்கொண்டிருந்த நேரத்தில், திருடர்கள் கைவரிசை காட்டி ₹24 லட்சம் மதிப்புள்ள 73 செல்போன்களை திருடிச்சென்றுள்ளனர்.
News November 1, 2025
ரயில்வேயில் 2,569 பணியிடங்கள்.. Apply Now

இந்தியா முழுவதும் Junior Engineer, Depot Material Superintendent உள்ளிட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. மொத்த பணியிடங்கள் 2,569. இதில், சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயில் 160 பணியிடங்கள். விருப்பமுள்ளவர்கள் 30.11.2025 வரை rrbchennai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை இளைஞர்கள் தவறவிட வேண்டாம்.
News November 1, 2025
நாட்டை உலுக்கிய துயரம்.. PM மோடி உருக்கமாக இரங்கல்

ஆந்திராவின் <<18168033>>ஸ்ரீகாகுளம் காசிபுக்கா வெங்கடேஸ்வரர் கோயில்<<>> கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது. இத்தகைய துயர சம்பவத்தை அறிந்து இதயம் நொறுங்கிவிட்டதாக PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000-ம் நிவாரணம் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.


