News October 12, 2024

கவரப்பேட்டை ரயில் விபத்து: 8 பெட்டிகள் அகற்றம்

image

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே ரயில் விபத்து நடந்த இடத்தில் இருந்து 8 பெட்டிகள் ராட்சத கிரேன்கள் மூலம் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 11 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், தற்போது ராட்சத இயந்திரங்கள் மூலம் 8 பெட்டிகள் அகற்றப்பட்டன. மீதமுள்ள 3 ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு படை மற்றும் மீட்பு குழுவினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News September 14, 2025

சென்னையில் அர்ச்சகராக வாய்ப்பு

image

வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் புதிதாகத் தொடங்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் 2025 – 2026ஆம் கல்வி ஆண்டிற்கான பகுதி நேர மாணவ சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பகுதி நேர வகுப்பில் பயில விரும்பும் மாணவ / மாணவியர் அதற்கான விண்ணப்பங்களை www.vadapalaniandavar.hrce.tn.gov.in, www.hrce.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து அக்.13க்குள் விண்ணப்பிக்கலாம்.

News September 14, 2025

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 13) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 13, 2025

திரு.வி.க.நகரில் கஞ்சா பறிமுதல்: பெண் கைது

image

திரு.வி.க.நகர் காவல் குழு ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று காலை பேருந்து நிலையம் அருகே சந்தேகமாக பையுடன் நின்ற 2 நபர்களை விசாரித்தபோது, 30 கிராம் OG கஞ்சா, 1.100 கிலோ கஞ்சா மற்றும் ₹90,000 பணம் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. பின் நஸ்ரின் என்ற பெண் கைது செய்யப்பட்டு, 17 வயது இளஞ்சிறார் மீது விசாரணை நடைபெறுகிறது. நஸ்ரின் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!