News October 12, 2024

அம்மனுக்கு தலை காணிக்கை: பார்த்து அலறிய மக்கள்!

image

ம.பி.யில் உள்ள துர்க்கை கோயிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது, பக்தர்களுடன் இருந்த ஒருவர், திடீரென கத்தியை எடுத்து, தனது கழுத்தை கரகரவென அறுத்தார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். சிலர் அவரை தடுத்து நிறுத்தி, ஹாஸ்பிட்டலில் சேர்த்தனர். அவர் பாதி கழுத்து அறுபட்டு ICU-வில் அவர் உள்ளார். ராஜ்குமார் என்ற அவர், 9 நாள் விரதமிருந்து தலை காணிக்கை செலுத்த வந்தவராம்.

Similar News

News August 12, 2025

தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்கள்? நேரு விளக்கம்

image

தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது வதந்தி என்று அமைச்சர் KN நேரு தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் எனவும் கூறியுள்ளார். தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது என தெரிவித்த அவர் கொஞ்சம் கால அவகாசம் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News August 12, 2025

என் சாவுக்கு காதலனே காரணம்.. உயிரை விட்ட பெண்

image

‘எனது சாவிற்கு காதலன் ரமீஸும், அவரது குடும்பமுமே காரணம். மதம் மாறச் சொல்லி என்னை உடல் ரீதியாக துன்புறுத்தினார்கள்.’ கேரளா எர்ணாகுளத்தில் டீச்சர் டிரைனிங் மாணவி சோனா(23) தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய வரிகள் இவை. வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் வசித்த அவருக்கு நடந்த கொடுமைகள் அவரது உயிரையே பறித்திருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸ், ரமீஸை கைது செய்து விசாரித்து வருகிறது.

News August 12, 2025

BREAKING: 4 செமிகண்டக்டர் ஆலைகளுக்கு ஒப்புதல்

image

ஆந்திரா, ஒடிசா, பஞ்சாப் மாநிலங்களில் ₹4,600 கோடி மதிப்பீட்டில் 4 செமிகண்டக்டர் ஆலைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், உ.பி.,யின் லக்னோவில் Phase-1B மெட்ரோ திட்டத்திற்காக ₹5,801 கோடியும், அருணாச்சலில் 700 மெகா வாட் மின் திட்டத்திற்காக ₹8,146 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!