News October 12, 2024
சேலம் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு

சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு விலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் டிச.23 முடிய பச்சைப்பயறு மற்றும் உளுந்து கொள்முதல் செய்யப்படவுள்ளது. பயன்பெற விரும்பும் பச்சைப்பயறு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சேலம், மேச்சேரி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களையும், உளுந்து சாகுபடி விவசாயிகள் சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தினையும் ஆவணங்களுடன் அணுகிப் பதிவு செய்து தங்களது விளைப்பொருட்களை விற்பனை செய்து பயனடையலாம்.
Similar News
News August 26, 2025
சேலம்: இரவு நேர ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

சேலம் மாநகரத்தில் 26.08.2025-ம் தேதி இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்; J.ஜெய்சல்குமார் (94981-78821) , P.குமார் (94981-74170), R.பால்ராஜ் (94436-21083), D.காந்திமதி (94981-75610), ஆகியோர் இன்று இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
News August 26, 2025
சேலம் மாவட்ட காவல்துறையின் அறிவிப்பு!

சேலம் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது; வாகனங்களில் பக்கவாட்டு கண்ணாடிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, சாலை வீதிகளை முறையாக பரிசீலனை செய்து பாதுகாப்பாக பயணிக்க வேண்டும். விபத்துகளை தவிர்க்க பக்கவாட்டு கண்ணாடிகள் சரியாக பயன்படுத்தப்படுவது அத்தியாவசியம் எனவும், அனைவரும் பாதுகாப்புடன் சாலையில் பயணிக்க வேண்டுமெனவும் காவல்துறை கேட்டுக்கொண்டது.
News August 26, 2025
இலவச போர்க்லிப்ட் ஆப்ரேட்டர் பயிற்சி!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 38 வயது வரை உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு தாட்கோ மூலம் இலவசமாக தங்குமிடம் உணவுடன் போர்க் லிப்ட் ஆப்ரேட்டர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் சேர விருப்பமுள்ள சமுதாயத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் (www.tahdco.com) இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.