News March 17, 2024
அரக்கோணம்: மான் மாமிசம் விற்பனை செய்த 2 பேர் கைது

சோளிங்கர் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவர் ஆர்கே பேட்டை அடுத்த ராஜா நகரம் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் என்பவருக்கு இரண்டு கிலோ மான் மாமிசம் விற்பனை செய்தார். தகவலின் பேரில் ஆற்காடு வனத்துறையினர் அர்ஜுனன், மதன்குமார் ஆகியோரை இன்று கைது செய்தனர். முன்னதாக சோளிங்கர் வட்டாட்சியர் தேவி முன்பாக இரண்டு பேரும் ஆஜர் படுத்தப்பட்டனர்.
Similar News
News July 7, 2025
இந்திய கடற்படையில் வேலை ரெடி. உடனே அப்ளை பண்ணுங்க

இந்திய கடற்படையில் உள்ள குரூப்.பி மற்றும் குரூப்-சி பிரிவில் உள்ள சார்ஜ்மேன், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1,097 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வயது 18 முதல் 45 வரை இருக்கலாம். 10th முதல் பொறியில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் 18,000- 1,42,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜூலை 18க்குள்<
News July 7, 2025
சோளிங்கரில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கிய எம்.எல்.ஏ

சோளிங்கர் பகுதியில் உள்ள தகரக்குப்பத்தை சேர்ந்த சந்தியா, மாமண்டூர் கிராமத்தை சேர்ந்த கிஷோர், சோளிங்கர் பகுதியை சேர்ந்த சரிகா, ரக்சா, லட்சுமி, ராஜேஷ் ஆகிய 6 கல்லூரி மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி சோளிங்கர் தொகுதி முனிரத்தினம் எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனர். அதன்பேரில் அவர் தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.10 ஆயிரம் வீதம் 6 பேருக்கும் ரூ.60 ஆயிரத்துக்கான காசோலைகளை நேற்று வழங்கினார்.
News July 7, 2025
லாலாபேட்டை உழவர் சந்தையில் காய்கறி விலை நிலவரம்

லாலா பேட்டை உழவர் சந்தையில் இன்று ( ஜூலை-07) காய்கறி விலை ஒரு கிலோவில் தக்காளி ரூ.28, உருளை ரூ.28, சின்ன வெங்காயம் ரூ.60, பெரிய வெங்காயம் ரூ.28, மிளகாய் ரூ.45, கத்திரிக்காய் ரூ.35, வெண்டை ரூ.40, முருங்கை ரூ.50, பீர்கங்காய் ரூ.35, சுரக்காய் ரூ.15-20, புடலங்காய் ரூ.25, பாகற்காய் ரூ.45-50, தேங்காய் ரூ.15-30, முள்ளங்கி ரூ.30, பீன்ஸ் ரூ.56-80, அவரை ரூ.58, கேரட் ரூ.42 என விற்பனை செய்யப்படுகிறது.