News October 12, 2024
MEESHO ஊழியர்களுக்கு ஹாப்பி நியுஸ்

தங்களின் ஊழியர்கள் புத்துணர்ச்சி பெறுவதற்காக 9 நாட்கள், ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கி MEESHO நிறுவனம் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. வெற்றிகரமான பண்டிகை கால விற்பனையை தொடர்ந்து, அக் 26-நவ. 3ம் தேதி வரை லேப்டாப், மீட்டிங் என எந்த தொந்தரவும் இல்லாமல் ஊழியர்கள் தங்களின் விடுப்பை கொண்டாடலாம் என கூறியுள்ளது. ஊழியர்களின் கஷ்டத்தை புரிந்ததற்காக நன்றி என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Similar News
News August 12, 2025
அடுத்த 48 மணி நேரத்தில்.. கனமழை வெளுக்கும்!

வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது 48 மணி நேரத்தில் வலுவடையும் என்றும் IMD கணித்துள்ளது. மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்து வருகிறது. உங்க ஊரில் மழையா?
News August 12, 2025
பெண் கையை பிடித்து இழுத்தால் குற்றமா? தீர்ப்பு

திருமணமாகாத மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த வழக்கில் முருகேசன் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ஒரு ஆண் எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்திருப்பது குற்றமாகாது எனக்கூறி 3 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
News August 12, 2025
ஒடிசாவில் தேர்தல் முறைகேடு: பிஜு ஜனதா தளம் புகார்

ஒடிசாவில் நடத்த லோக்சபா, சட்டமன்ற தேர்தல்களில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ஒடிசாவில் 21 நாடாளுமன்ற தொகுதிகளில் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக BJD தெரிவித்துள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் ECI கண்டுகொள்ளவில்லை என தெரிவித்துள்ள BJD, கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.