News October 12, 2024
டோரேமானுக்கு குரல் கொடுத்தவர் மரணம்

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான சிறார்களின் மனம் கவர்ந்த கார்டூன் கதாபாத்திரங்களில் டோரேமானும் ஒன்றாகும். ஜப்பானைச் சேர்ந்த கார்டூன் கலைஞர் பிஜிகோ பிஜியோ என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த கதாபாத்திரத்துக்கு 1979ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை குரல் கொடுத்தவர் நொபுயு ஓயாமா ஆவார். அவர் கடந்த 29ஆம் தேதி தனது 90ஆவது வயதில் வயோதிகம் காரணமாக காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 12, 2025
பெண் கையை பிடித்து இழுத்தால் குற்றமா? தீர்ப்பு

திருமணமாகாத மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த வழக்கில் முருகேசன் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ஒரு ஆண் எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்திருப்பது குற்றமாகாது எனக்கூறி 3 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
News August 12, 2025
ஒடிசாவில் தேர்தல் முறைகேடு: பிஜு ஜனதா தளம் புகார்

ஒடிசாவில் நடத்த லோக்சபா, சட்டமன்ற தேர்தல்களில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ஒடிசாவில் 21 நாடாளுமன்ற தொகுதிகளில் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக BJD தெரிவித்துள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் ECI கண்டுகொள்ளவில்லை என தெரிவித்துள்ள BJD, கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
News August 12, 2025
புதிய பாதையில் இந்திய கிரிக்கெட் அணி!

நடுத்தரவர்க்க, மாநகரவாசிகளின் அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, இன்று அனைத்து தரப்புக்குமானதாக மாறிவருகிறது. சமீபத்திய தொடரில், ஒவ்வொரு டெஸ்ட்டிலும் குறைந்தது 8 வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். லார்ட்ஸில் அதிகபட்சமாக 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் களமிறங்கினர். கில்(Sikh) வழிநடத்தும் அணியின் வேகப்பந்து வீச்சுப் படைக்கு பும்ரா(Sikh), சிராஜ்(Muslim) தலைமை ஏற்றுள்ளனர்.