News March 17, 2024
மூதாட்டி கொலை ஒருவர் கைது

அரியலூர் செந்துறை அடுத்த இலங்கைச்சேரியை சேர்ந்த பவளக்கொடி என்பவர் கடந்த வியாழக்கிழமை(மார்ச்.14) அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த விசாரணையில் அவரை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்பது தெரியவந்தது. மருத்துவ செலவிற்கு அடமானம் வைக்க அவரது நகையை கேட்டதாகவும், தர மறுத்த பவளக்கொடியின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. சரஸ்வதியை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.
Similar News
News August 14, 2025
அரியலூர்: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆக.15ம் தேதி, அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து வகை மதுபான கடைகள் மற்றும் கூடங்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார். அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்வதையோ, வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையோ தவிர்க்க வேண்டும் என்றும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News August 14, 2025
அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு (15.08.2025) ஒருநாள் மட்டும் உலர் தினமாக (Dry Day) விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
News August 13, 2025
அரியலூர்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK IT

அரியலூர் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <