News March 17, 2024
விஷ வாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் நெடுங்குன்றம் ஊராட்சி, கொளப்பாக்கம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவர் நேற்று மாலை கொளப்பாக்கத்திலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் “செப்டிக் டேங்க்” சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது விஷவாயு தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கிளம்பாக்கம் போலீசார் தேவராஜின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 23, 2025
செங்கை: பிஸ்னஸ் செய்ய சூப்பர் மானியங்கள்!

செங்கை மாவட்ட மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன:
▶️ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/
▶️இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp
▶️முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/
▶️கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
உடனே அனைவருக்கும் SHARE!
News October 23, 2025
செங்கல்பட்டில் இது மீண்டும் வருமா..?

செங்கல்பட்டில் வீட்டிலிருந்தே குப்பைகளை பெறும் முறை வந்த பிறகு, பல இடங்களில் மாநகராட்சி பொது குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டன. ஆனால், இதன் விளைவுகள் எதிர்மறையாகி பொது சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. ‘வீட்டில் இருந்தே சேகரிப்பு’ எனும் முறை முற்றிலுமாக தோல்வியில் முடிந்துள்ளதால், பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண, உடனடியாக பொது குப்பைத் தொட்டி முறையை கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
News October 23, 2025
செங்கை: பெண்களே.., பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

செங்கை மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமுமின்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!