News October 11, 2024
பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்த 18 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

சென்னை போக்குவரத்து ஆணையர் உத்தரவின் பேரில் ஓசூர் தர்மபுரி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஓசூர் வழியாக தமிழக அரசுக்கு வரி செலுத்தாமலும், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்தும் இயக்கப்பட்ட 18 வெளிமாநில ஆம்னி பேருந்துகளை வாகன தணிக்கையில் ஈடுபட்டு பறிமுதல் செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 40 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட உள்ளது.
Similar News
News August 26, 2025
கிருஷ்ணகிரி: பேருந்தில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு…

கிருஷ்ணகிரி மக்களே, அரசு பேருந்தில் நடத்துனர் உங்களை மரியாதை குறைவாக நடத்தினாலோ, சரியான சில்லறை வழங்கவில்லை என்றாலோ, உங்கள் பகுதியில் பேருந்து நிற்காமல் சென்றாலோ, பேருந்து கால தாமதமாக வருகிறது என்றாலோ (அ) லக்கேஜை பேருந்தில் மறந்து விட்டாலோ இனி கவலை வேண்டாம். இந்த எண்ணில் (1800 599 1500) உங்கள் குறைகளை புகார் செய்யலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
News August 26, 2025
கிருஷ்ணகிரியில் இறந்த பின்னும் வாழும் சிறுவன்!

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அடுத்த பாரத கோவிலை சேர்ந்தவர்கள் தேவேந்திரன், இவரது மனைவி ஜமுனா. இவர்களின் மகன் கோவில்கனி (8). உடல் நலக்குறைவால் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கடந்த 21ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அவரின் கண்களை தானமாக அளிக்க பெற்றோர் முன்வந்தனர். இவரது கண்கள் பெறப்பட்டு, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.
News August 26, 2025
கிருஷ்ணகிரியில் புதிய தொழில் பயிற்சி நிறுவனத் தொடக்கம்

கிருஷ்ணகிரி அவதானப்பட்டியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, 35 மாணவ மாணவிகளுக்கு சோ்க்கை ஆணையை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் நேற்று (ஆகஸ்ட் 25) வழங்கினாா்.