News March 17, 2024
குறைதீர் கூட்டம் ரத்து – ஆட்சியர்

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் உள்ளிட்ட அனைத்து குறைதீர் கூட்டங்களும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 9, 2025
சத்தியமங்கலம் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

சத்தி நகராட்சியில் புதிதாக கட்டடங்கள் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த நிலையில், பலா் அதற்கு சொத்துவரி விதிப்பு செய்யப்படாமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். மேலும் வீட்டில் மேல்பகுதியில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கும் சொத்துவரி செய்யப்படாமல் உள்ளது தெரியவந்துள்ளதால், அதனை விரைவில் செலுத்த சத்தியமங்கலம் நகராட்சி ஆணையா் வெங்கடேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News November 9, 2025
பனை விதை நடும் பணியினை கலெக்டர் தொடங்கி வைத்தார்

பவானி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் மூலம் நடைபெற்ற சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 முன்னிட்டு வேளாண்மை வளாகத்தில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் 2000 பனை விதைகள் இன்று நடப்பட்டது அந்தியூர் பவானி கீழ்வாணி உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன.
News November 8, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு

ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் உடல் நலக்குறைவாகவும் அல்லது சோர்வாகவும் இருக்கும் பொழுது வாகனம் ஓட்டுவதை தவிர்த்திடுவோம்.விபத்தில்லா பயணத்தை உருவாக்குவோம் என இன்று ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக விபத்து தடுப்பு விழிப்புணர்வு சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


