News October 11, 2024
லெபனானை கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்?

இஸ்ரேல் – லெபனான் மோதல் ஏற்படுவதை தடுக்கவே 1978 முதல் தெற்கு லெபனான் எல்லையில் ஐநா அமைதிப் படை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவும் இதில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் ஐநா அமைதிப்படை வீரர்கள் 4 பேர் காயமடைந்துள்ளனர். எல்லைப் பகுதியில் ஐநா படையினர் இருப்பது லெபனான் மீது படையெடுக்க தடையாக இருப்பதால், வேண்டுமென்றே இஸ்ரேல் அங்கு தாக்குதல் நடத்தியதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.
Similar News
News August 12, 2025
BLA பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா அறிவிப்பு

பலூசிஸ்தான் விடுதலைப் படை(BLA) மற்றும் அதன் துணை அமைப்பான மஜீத் படைப்பிரிவை பயங்கரவாத அமைப்புகள் என அமெரிக்கா அறிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர் அமெரிக்காவில் இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கனிமவளம் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என கோரி BLA அந்நாட்டுக்கு எதிராக தாக்குதல்களில் ஈடுபட்டு வருவது கவனிக்கதக்கது.
News August 12, 2025
Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

1. முதல்முதலில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த பெண்மணி யார்?
2. தொல்காப்பியம் எத்தனை பிரிவுகளை கொண்டது?
3. சுப்பிரமணிய பாரதியார் எப்போது சென்னையில் சுயராஜ்ய நாளை கொண்டாடினார்?
4. செஸ் விளையாட்டை கண்டுபிடித்த நாடு எது?
5. நிலவு இல்லாத கோள்கள் எவை?
பதில்கள் 12:30 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.
News August 12, 2025
மாநிலம் அதிர மாநாட்டுக்கு தயாராவோம்: விஜய்

‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற கருத்தை முன்வைத்து ஆக.21-ல் மதுரையில் மாநாடு நடைபெறும் என விஜய் அறிவித்துள்ளார். மாநிலம் அதிர மாநாட்டுக்கு தயாராவோம்; நாம் மாற்று சக்தி அல்ல; முதன்மை சக்தி என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம் எனக் கூறியுள்ள அவர், மதுரை மாநாட்டில் கொள்கை எதிரி, அரசியல் எதிரியை சமரசமின்றி எதிர்ப்போம் என தெரிவித்துள்ளார்.