News October 11, 2024
நெல்லையில் மிக கனமழைக்கு வாய்ப்பு

நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை(ஆரஞ்ச் அலெர்ட்) பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியே செல்லும் மக்கள் முன் பாதுகாப்புடன் செல்வது நல்லது. SHARE IT.
Similar News
News August 27, 2025
நெல்லை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்
News August 27, 2025
பற்கள் பிடுங்கிய வழக்கு செப்.15ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அம்பாசமுத்திரம் காவல் நிலையங்களில் 2023ல் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக ஏ எஸ் பி பல்வீர் சிங் உள்பட 14 பேர் மீது சிபிசிஐடி 4 வழக்குகள் பதிவு செய்தது. திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் வழக்கை மனித உரிமை மீறலாகக் கருதி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரினர். பல்வீர் சிங் உள்ளிட்டோர் ஆஜராகினர். வழக்கு செப்.15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது .
News August 27, 2025
நெல்லை: LIC நிறுவனத்தில் ரூ.88,635 சம்பளத்தில் வேலை!

காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிக்குள் <