News March 17, 2024

திருப்பூர்: நாய்கள் கடித்து மான்கள் பலி

image

திருப்பூர் புதுப்பாளையம் ஊராட்சி மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் பிறந்து ஆறு மாதமே ஆன புள்ளிமான் ஒன்று பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது. அதேபோன்று அதே பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று காயங்களுடன் இறந்து கிடந்தது. விசாரணையில் தெரு நாய்கள் கடித்ததில் இரண்டு புள்ளி மான்களும் நேற்று உயிர் இழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Similar News

News February 7, 2026

திருப்பூர்: டிகிரி போதும்.. வங்கியில் வேலை

image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5,138 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1) ஏதேனும் ஒரு டிகிரி போதும்.
2) வயது வரம்பு: 20 முதல் 28.
3) சம்பளம்: ரூ.15,000
4) விண்ணப்பிக்க<> இங்கு கிளிக் செய்யவும்<<>>.
5) கடைசி நாள்: பிப்.24-ம் தேதி ஆகும்.
(வேலை தேடுபவர்களுக்கு Share பண்ணுங்க)

News February 7, 2026

திருப்பூர்: இலவச வீடு.. எப்படி விண்ணப்பிக்கலாம்

image

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (Share)

News February 7, 2026

தாராபுரம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்து

image

தாராபுரம் – உடுமலை சாலையில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட் அருகே நேற்று இரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனங்களில் பயணித்த நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக தாராபுரம் GH-க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

error: Content is protected !!