News March 17, 2024

திருவள்ளூர்: பரோட்டா சாப்பிட்டவர் உயிரிழப்பு

image

ஆவடி அடுத்த பாலவேடு, கோவிந்தராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகேயுள்ள ஓட்டலில் பரோட்டா வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். உடனடியாக அப்பகுதியினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News August 16, 2025

திருவள்ளூரில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

திருவள்ளூரில், வாடகைக்கு குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News August 16, 2025

திருவள்ளூர்: தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

image

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று (ஆக.16) காலை தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மாலா என்பவரை செவிலியர் மீரா, கன்னத்தில் அறைந்துள்ளார். மருத்துவர் அறையை சுத்தம் செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக செவிலியர் மீரா அறைந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News August 16, 2025

திருவள்ளூரில் உள்ளவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

image

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் ஆகஸ்ட் 30ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இதில், 12th, ITI, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதற்கு முன்பதிவு அவசியம். <>இந்த லிங்க்<<>> மூலம் ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு (7904569717) ஷேர்!

error: Content is protected !!