News October 11, 2024
பழநி முருகன் கோயிலில் நாளை நடையடைப்பு

பழநி முருகன் கோயில் துணை கோயிலான பெரியநாயகி அம்மன் கோயில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நாளை கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயிலில் வன்னிகா சூரன் வதம் நடக்கிறது. பழநி கோயிலிருந்து பராசத்தி வேல் வரும் நிலையில் பக்தர்கள் காலை 11 மணி வரை மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். இதையடுத்து மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது. பிற்பகல் 3.15-க்கு மலைகோவில் நடை அடைக்கபடுகிறது.
Similar News
News August 13, 2025
திண்டுக்கல்லில் இலவச கார் ஓட்டுநர் பயிற்சி!

திண்டுக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச தொழில் முறை கார் ஓட்டுநர் பயிற்சி திண்டுக்கல்லில் வழங்கப்படவுள்ளது. வருகிற ஆக.29ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் பயிற்சிக்கு தமிழ்நாடு மொத்தம் இதற்கு 8155 காலியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க<
News August 13, 2025
திண்டுக்கல்: எண்ணெய்யை கணவன் மீது ஊற்றிய மனைவி

திண்டுக்கல் அருகே, கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட கணவன் அசோக்குமார் மீது, மனைவி அபிநயா மற்றும் அவரது 15 வயது மகன் ஆகியோர் காய்ச்சி வைத்திருந்த சுடு எண்ணெயை அவர் மீது ஊற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அசோக்குமார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். செம்பட்டி போலீசார் மனைவி மற்றும் மகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News August 13, 2025
திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடைகள் இயங்காது

திண்டுக்கல் மாவட்டம் சுதந்திர தினத்தை முன்னிட்டு, 15.08.2024 அன்று அனைத்து விதமான மதுபானக் கடைகள் மூடப்படும். அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன்தெரிவித்துள்ளார்.