News March 17, 2024

தேர்தல் நடத்தை விதி மீறலில் தமிழகத்தில் ”முதல் வழக்கு”

image

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன், நடத்தை விதிகள் நேற்று முதலே அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதி மீறல் புகாரில் தமிழகத்தில் முதல் வழக்கு பதியப்பட்டுள்ளது. சிவகங்கையில் தேர்தல் விதிமுறையை மீறி, ஊர்வலம் சென்று சிலைகளுக்கு மாலை அணிவித்தது உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Similar News

News October 26, 2025

4 ஆண்டுகளில் 42.61 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல்: அரசு

image

நெல் கொள்முதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இதற்கு பதிலளித்துள்ள TN அரசு, ஒவ்வொரு நேரடி கொள்முதல் நிலையம் மூலம் தினமும் 1,000 மூட்டை, நெல் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில், சராசரியாக 42.61 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறியுள்ள அரசு, ஞாயிற்றுக்கிழமையும் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளது.

News October 26, 2025

EPS துரோகம் செய்பவர் என்பது விஜய்க்கு தெரியாதா? TTV

image

சொந்த கட்சிக்காரர்களுக்கே துரோகம் செய்த EPS, தனக்கு துரோகம் செய்வார் என்பது விஜய்க்கு தெரியாதா, அவர் என்ன சிறு பிள்ளையா என்று டிடிவி கேள்வி எழுப்பியுள்ளார். எந்த கூட்டணியும் உடையும் என்று நான் ஜோதிடம் கூறவில்லை; நீங்கள் எதிர்பாராத விதமாக புதிய கூட்டணிகள் உருவாகும். வரக்கூடிய தேர்தலில் ஆளும் திமுக கூட்டணிக்கும், தவெக தலைமையில் அமைகின்ற கூட்டணிக்கும் இடையேதான் போட்டியிருக்கும் எனவும் தெரிவித்தார்.

News October 26, 2025

வங்கிக்கடன்.. வந்தது HAPPY NEWS

image

தங்க நகைகளை போலவே, இனி வெள்ளி நகைகளை வைத்தும் கடன் பெற RBI ஒப்புதல் அளித்துள்ளது. இது 2026 ஏப்.1 முதல் அமலுக்கு வருகிறது. ஒரு தனிநபர் அதிகபட்சமாக 10 kg வெள்ளியை அடகு வைக்கலாம். அதிகபட்சமாக ₹10 லட்சம் வரை வெள்ளியை அடகு வைத்து கடனாக பெறலாம். ₹1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகளுக்கு ₹85 ஆயிரம் வரை கடன் கிடைக்கும். தங்கத்திற்கு இணையாக பலரும் வெள்ளி வாங்கி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

error: Content is protected !!