News October 10, 2024
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் அக்டோபர் 18ஆம் தேதி அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் விருப்பம் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் வரும் அக்டோபர் 18ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை துருகம் சாலையில் உள்ள அரிசி ஆலை மண்டபத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News December 13, 2025
கள்ளக்குறிச்சி: வீட்டிலிருந்து சென்றவர் சலடலாமா மீட்பு!

கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அ.பாக்கியராஜ்(39), ஆட்டோ ஓட்டுநர். இவர் கடந்த டிச.8 வீட்டை விட்டு வெளியே சென்று திரும்ப வராததால், பாக்கியராஜின் மனைவி தீபா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், பாக்கியராஜ் குளத்தில் இருந்து சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். பின், தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
News December 13, 2025
கள்ளக்குறிச்சி: சொந்த நிலத்தை அளந்தவருக்கு கொலை மிரட்டல்!

கள்ளக்குறிச்சி: அரசம்பட்டைச் சேர்ந்த ராஜேந்திரன், சத்தியமூர்த்தி இருவருக்கும் கொசப்பாடி அருகருகே நிலம் உள்ளது. ராஜேந்திரனுக்கு சொந்தமான 1 ஏக்கர் 67 சென்டில், 10 சென்ட் நிலம் சத்தியமூர்த்தி அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில், ராஜேந்திரன் தன் நிலத்தை அளந்த போது, சத்தியமூர்த்தி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் சத்தியமூர்த்தி மீது நேற்று (டிச.12) போலீசார் வழக்குபதிந்தனர்.
News December 13, 2025
கள்ளக்குறிச்சி: சொந்த நிலத்தை அளந்தவருக்கு கொலை மிரட்டல்!

கள்ளக்குறிச்சி: அரசம்பட்டைச் சேர்ந்த ராஜேந்திரன், சத்தியமூர்த்தி இருவருக்கும் கொசப்பாடி அருகருகே நிலம் உள்ளது. ராஜேந்திரனுக்கு சொந்தமான 1 ஏக்கர் 67 சென்டில், 10 சென்ட் நிலம் சத்தியமூர்த்தி அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில், ராஜேந்திரன் தன் நிலத்தை அளந்த போது, சத்தியமூர்த்தி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் சத்தியமூர்த்தி மீது நேற்று (டிச.12) போலீசார் வழக்குபதிந்தனர்.


