News October 10, 2024
வடகிழக்கு பருவமழை எப்போது?

தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதக சூழல் ஏற்பட்டுள்ளதாக நெல்லை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார். அடுத்த 4 தினங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இன்று(அக்.,10) விடுத்துள்ள வானிலை பதிவில் தெரிவித்துள்ளார். இதனிடையே கடந்த சில தினங்களாக நெல்லை மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
Similar News
News August 27, 2025
நெல்லை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்
News August 27, 2025
பற்கள் பிடுங்கிய வழக்கு செப்.15ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அம்பாசமுத்திரம் காவல் நிலையங்களில் 2023ல் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக ஏ எஸ் பி பல்வீர் சிங் உள்பட 14 பேர் மீது சிபிசிஐடி 4 வழக்குகள் பதிவு செய்தது. திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் வழக்கை மனித உரிமை மீறலாகக் கருதி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரினர். பல்வீர் சிங் உள்ளிட்டோர் ஆஜராகினர். வழக்கு செப்.15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது .
News August 27, 2025
நெல்லை: LIC நிறுவனத்தில் ரூ.88,635 சம்பளத்தில் வேலை!

காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிக்குள் <