News October 10, 2024
வடகிழக்கு பருவமழை எப்போது?

தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதக சூழல் ஏற்பட்டுள்ளதாக நெல்லை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார். அடுத்த 4 தினங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இன்று(அக்.,10) விடுத்துள்ள வானிலை பதிவில் தெரிவித்துள்ளார். இதனிடையே கடந்த சில தினங்களாக நெல்லை மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
Similar News
News November 16, 2025
நெல்லை: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

நெல்லை மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <
News November 16, 2025
நெல்லை: ஓடும் ரயிலில் தவறி விழுந்து மீனவர் பலி

நெல்லை – வள்ளியூர் இடையே தளபதிசமுத்திரம் ரயில்வே தண்டவாளம் அருகே நேற்று முன்தினம் இளைஞர் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் உயிரிழந்தவர் குமரி சின்னமுட்டத்தை சேர்ந்த மீனவர் திருமேனி செல்வம் (27) என்பதும் குமரி ரயிலில் பயணித்த போது ரயிலில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து இளைஞர் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 16, 2025
நெல்லை: 1,429 காலியிடங்கள்.. உடனே APPLY

திருநெல்வேலி மக்களே, தமிழ்நாடு சுகாதாரத்துறையில் (TN MRB) காலியாக உள்ள Health Inspector Grade-II பணிகளுக்கு 1,429 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளியில் தமிழை ஒரு படமாக பயின்று தகுதியான படிப்பை முடித்தவர்கள் நவ. 16 (இன்று)-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.19,500. மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <


