News October 10, 2024
கோவையில் மாயமான 3 சிறுமிகள் மீட்பு

கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் காணாமல் போன 3 மாணவிகளை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று பள்ளியில் இருந்து மாயமான மூன்று மாணவிகள், சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவிகளை மீட்க தனிப்படையினர் சென்னை செல்ல உள்ளனர்.
Similar News
News December 17, 2025
ரூ.1 லட்சம் பரிசு: அறிவித்தார் கோவை கலெக்டர்

கோவையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்மாதிரியான பங்களிப்பை செய்த நிறுவனங்கள், தனிநபா்கள் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் விருது பெறும் 100 தனிநபா்கள், நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் ஜனவரி.20-ம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
News December 17, 2025
கோவை: செந்தில்பாலாஜிக்கு அடுத்த ஷாக்!

கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற திமுக பல்வேறு வியூங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில், விளாங்குறிச்சியில் 70-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் ராஜினாமா செய்து செந்தில்பாலாஜிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இக்கடிதம் வைரல் ஆகி வருகிறது. இது கோவை திமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சில நாள்களுக்கு முன், திமுக நிர்வாகி CM-யிடம் போனில் பதவி நீக்கம் குறித்து மன வர்த்ததுடன் பேசியது குறிப்பிடத்தக்கது.
News December 17, 2025
கோயம்புத்தூர் பெண்ணுக்கு டார்ச்சர்!

கோவை, கணபதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண்ணுக்கு, தினமும் ஏராளமான பொருள்கள் ‘கேஷ்ஆன் டெலிவரி’ மூலம் அப்பெண்ணின் பெயருடன் ஆபாசமான வார்த்தை சித்தரிக்கப்பட்டு தொடர்ந்து வந்துள்ளது. இதில், மன உலைச்சலில் இருந்த அப்பெண், போலீசாரிடம் புகார் அளித்தார். விசாரணையில், அப்பெண்ணுடன் ஏற்கனவே வேலை பார்த்த மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளரான சதீஷ்குமார் என்பது தெரிந்தது. பின் அவரை போலீசார் கைது செய்தனர்.


