News October 10, 2024

மழைக்காலத்திற்கு ஏற்ற இதமான முசுமுசுக்கை டீ

image

மழைக்காலத்தில் ஏற்படும் இருமல், சளி, மூச்சிரைப்பு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் முசுமுசுக்கை டீ பருகலாம் என டயட்டீஷியன்ஸ் பரிந்துரைக்கின்றனர். முசுமுசுக்கை இலை (கைப்பிடி), தேநீர் தூள், சுக்கு, பட்டை, துளசி, மிளகு, மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனை வெல்லம் சேர்த்தால் மணமிக்க சுவையான முசுமுசுக்கை டீ ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமென்றாலும் பருகலாம்.

Similar News

News August 11, 2025

தூங்கும்போது உங்கள் கை, கால்கள் மரத்துப் போகிறதா?

image

தூங்கும் போது கை, கால்கள் மரத்துப் போகும் பிரச்னை பலருக்கு இருக்கலாம். விரல்கள், மணிக்கட்டு, முழங்கை பகுதிகளிலோ, கால்கள், சியாட்டிக் நரம்பு பகுதியிலோ அழுத்தம் அதிகமாகையில் அப்பகுதிகள் மரத்துப் போகும். ரத்தவோட்டம் தடைபடுவது மட்டுமல்லாமல், வைட்டமின் பி12, பி6, மக்னீசியம் சத்துகள் குறைவு கூட இதற்கு காரணமாகலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். தினசரி உடற்பயிற்சி, சரிவிகித உணவு இதற்கு சிறந்த தீர்வாகும்.

News August 11, 2025

வீடு தேடி வரும் ரேஷன்.. தாயுமானவர் திட்டம் தொடக்கம்

image

தமிழ்நாட்டில் உள்ள முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் ‘தாயுமானவர்’ திட்டத்தை CM ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சோதனை அடிப்படையில் 10 மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்த இந்த திட்டம் நாளை முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது. இதன்மூலம், மூத்த குடிமக்கள் 15.81 லட்சம், மாற்றுத் திறனாளிகள் 20.42 பேர் பயனடைய உள்ளனர்.

News August 11, 2025

IPS அதிகாரிகள் பணியிட மாற்றம்

image

4 IPS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி சரக டிஐஜியாக இருந்த வருண் குமார், சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊர்க்காவல் படை கமாண்டண்டாக பிரமோத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில குற்ற ஆவணப்பிரிவு ஐஜியாக ஜெயஸ்ரீ இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ஆயுஷ் திவாரி டேன்ஜெட்கோவிற்கு பணியமர்த்தப்பட்டுள்ளார்.

error: Content is protected !!