News October 10, 2024
பெரம்பலூரில் காய்கறி விலை நிலவரம்

பெரம்பலூர் காய்கறி மார்க்கெட்டில் இன்று 1 கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.70 வரையிலும், உருளைக்கிழங்கு -ரூ.50 முதல் ரூ.60 வரையிலும், கோழி அவரை ரூ.150 முதல் ரூ.170 வரையிலும், பீன்ஸ் ரூ.140 முதல் ரூ.150 வரையிலும், முருங்கைக்காய் ரூ.80 முதல் ரூ.100 வரையிலும், சின்னவெங்காயம் ரூ.50 முதல் ரூ.60 வரையிலும், முள்ளங்கி ரூ.40 முதல் ரூ.50 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
Similar News
News December 8, 2025
பெரம்பலுர்: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன் உதவி

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News December 8, 2025
பெரம்பலூர்: கள்ளச்சாராயம் காய்ச்சல்-ஒருவர் கைது

பெரம்பலூர் மாவட்டம், புது நடுவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளனூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவர் தனது வயலில் கள்ளசாராயம் காய்ச்சுவதற்காக பேரலில் 30 லிட்டர் கள்ளச்சாராயத்தை ஊறல் போட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதனை அப்பகுதியில் ரோந்து சென்ற பெரம்பலூர் ஊரக காவல் துறையினர் கண்டறிந்து ராஜேந்திரனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 8, 2025
பெரம்பலூர்: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் பெரம்பலூர் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (30), ரஞ்சன்குடி ராதாகிருஷ்ணன் (22) ஆகியோர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளனர். அப்பொழுது வீட்டின் அருகே உள்ள மின் கம்பி உரசியதில் இருவரும் கடும் பாதிப்படைந்தனர். இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொழுது மணிகண்டன் செல்லும் வழியிலே உயிரிழந்தார். இது குறித்து மங்களமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


