News October 10, 2024
டாடா பற்றிய 3 சுவாரஸ்யமான தகவல்கள்!

1) 1937-இல் பிறந்த ரத்தன் டாடாவின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக 1948-இல் பிரிந்துவிட்டனர். பிறகு தனது பாட்டி நவஜ்பாய் டாடா பராமரிப்பில்தான் அவர் வளர்ந்தார். 2) ரத்தன் டாடாவுக்கு 4 முறை திருமணம் நடைபெறுவதற்கான சூழல் நெருங்கிய போதிலும், கடைசி நேரங்களில் அவை கை நழுவின. 3) அமெரிக்க பெண்ணை காதலித்து வந்த டாடா, அவரை திருமணம் செய்யும் தருணத்தில் இந்தியா – சீனா போர் மூண்டதால் அதுவும் நடக்கவில்லை.
Similar News
News August 11, 2025
தூங்கும்போது உங்கள் கை, கால்கள் மரத்துப் போகிறதா?

தூங்கும் போது கை, கால்கள் மரத்துப் போகும் பிரச்னை பலருக்கு இருக்கலாம். விரல்கள், மணிக்கட்டு, முழங்கை பகுதிகளிலோ, கால்கள், சியாட்டிக் நரம்பு பகுதியிலோ அழுத்தம் அதிகமாகையில் அப்பகுதிகள் மரத்துப் போகும். ரத்தவோட்டம் தடைபடுவது மட்டுமல்லாமல், வைட்டமின் பி12, பி6, மக்னீசியம் சத்துகள் குறைவு கூட இதற்கு காரணமாகலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். தினசரி உடற்பயிற்சி, சரிவிகித உணவு இதற்கு சிறந்த தீர்வாகும்.
News August 11, 2025
வீடு தேடி வரும் ரேஷன்.. தாயுமானவர் திட்டம் தொடக்கம்

தமிழ்நாட்டில் உள்ள முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் ‘தாயுமானவர்’ திட்டத்தை CM ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சோதனை அடிப்படையில் 10 மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்த இந்த திட்டம் நாளை முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது. இதன்மூலம், மூத்த குடிமக்கள் 15.81 லட்சம், மாற்றுத் திறனாளிகள் 20.42 பேர் பயனடைய உள்ளனர்.
News August 11, 2025
IPS அதிகாரிகள் பணியிட மாற்றம்

4 IPS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி சரக டிஐஜியாக இருந்த வருண் குமார், சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊர்க்காவல் படை கமாண்டண்டாக பிரமோத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில குற்ற ஆவணப்பிரிவு ஐஜியாக ஜெயஸ்ரீ இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ஆயுஷ் திவாரி டேன்ஜெட்கோவிற்கு பணியமர்த்தப்பட்டுள்ளார்.