News March 17, 2024

கோழிகளை ஏற்றிச் சென்ற லாரி விபத்து

image

தாராபுரத்தில் இருந்து கோழிகள் மற்றும் வாத்துகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது காங்கேயம் பகுதியைச் சேர்ந்த ஞான பிரகாசம் என்பவர் மினி லாரியை ஓட்டிச் சென்றார். அப்போது எதிரே வந்த மற்றொரு லாரி மீது மோதி நேற்று விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஞானப்பிரகாசம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

Similar News

News October 23, 2025

எறிபந்து போட்டிக்கு தனியார் பள்ளி மாணவன் தேர்வு!

image

தேசிய அளவிலான எறிபந்து போட்டிக்கான வீரர்கள் தேர்வு பெருந்துறையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியின் மாணவன் பவின் கலந்து கொண்டு தேசிய அளவில் நடைபெறும் எறிபந்து போட்டிக்கு தேர்வாகியுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News October 23, 2025

திருப்பூர்: வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பில் வாராந்திர பொதுமக்களின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் இந்த குறைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

News October 23, 2025

திருப்பூர்: சிறப்பு வார்டு கூட்டம் – ஆட்சியர் அறிவிப்பு!

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வார்டு உறுப்பினர் தலைமையில் வருகிற அக்.27,28,29 ஆகிய தேதிகளில் சிறப்பு வார்டு கூட்டம் நடத்த அரசு ஆணையிட்டுள்ளது. இதில் பங்கேற்று பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் அடிப்படை தேவைகளான குடிநீர் வினியோகம் உள்ளிட்டவைகள் தொடர்பான கருத்துக்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் மனிஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!