News October 10, 2024

ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டுள்ள அதிகாரிகள்

image

வேலூர் மேல்மொணவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று(அக்.,9) காலை திடீரென ஆய்வு செய்தார். அந்த சமயத்தில் ஒரு ஆசிரியர் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்தார். வேறு ஆசிரியர்கள் வரவில்லை. இது குறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, பள்ளிக்கு உரிய நேரத்தில் வராத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Similar News

News December 8, 2025

வேலூர்: பைக் மோதி துடிதுடித்து பலி!

image

வேலூர்: சேண்பாக்கத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி ஆண்டாள்(67). இவர், நேற்று(டிச.7) அப்பகுதியில் உள்ள் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற போது பைக் மோதி தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். பைக்கில் மோதிய முள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த வாலிபர், அவரது தாயார் காயமடைந்தார். மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News December 8, 2025

வேலூர்: தூக்கிட்டு தற்கொலை!

image

கே.வி.குப்பம் பகுதியை அடுத்த வேப்பங்கனேரி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமியின் மகன் குமரன்(52) சுமார் 12 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தனது வீட்டிலேயே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜந்தா வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

News December 8, 2025

வேலூர்: காவல்துறை இரவு பணி விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச-07) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க..

error: Content is protected !!