News October 10, 2024
கஞ்சா வழக்கில் மதுரை போலீஸ் கைது

மதுரை, வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த பிரகாஷ், பழனியில் உள்ள, 14வது பட்டாலியன் தமிழக சிறப்பு படை காவலராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், கஞ்சா கடத்தல் வழக்கொன்றில் கைதான சிவாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, சிவாவிடம் பணம் கொடுத்து ஆந்திராவில் கஞ்சா வாங்கி வர சொன்னது பிரகாஷ் தான் என்று தெரிய வந்தது. இதையடுத்து, கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், நேற்று முன்தினம் பிரகாஷை கைது செய்தனர்.
Similar News
News August 24, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (ஆக.24) இரவு 10 மணி முதல் நாளை காலை 06 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாருக்கேனும் அவர்களின் உதவி தேவைப்பட்டால், அவர்களின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசர உதவிக்கு 100 தொடர்பு கொள்ளலாம்.
News August 24, 2025
மதுரை: அடிப்படை பிரச்னைக்கு உடனே தீர்வு

மதுரை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், சாலை சேதம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <
News August 24, 2025
சோழவந்தான் தொகுதிக்கு நாதக வேட்பாளர் அறிவிப்பு

வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாகலட்சுமி திருமாறன் என்பவரை வேட்பாளராக அறிவித்திருக்கிறார். அதற்கு வேட்பாளர் சார்பாக நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பதுடன் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர்.