News March 17, 2024
ஒலிபெருக்கி பயன்படுத்த தடை

புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு ஏப்ரல் 19ஆம் தேதி (ம) வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி அன்றும் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் காலங்களில் ஒலிபெருக்கியின் பயன்பாடு அதிகமாக இருக்கும். எனவே புதுச்சேரி. காரைக்கால். மாகே. ஏணாம் போன்ற பகுதிகளில் இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
Similar News
News November 17, 2025
கோரிமேட்டில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி

புதுச்சேரி, கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில், பள்ளிகளுக்கு இடையேயான (வட்டம்-2) தடகள போட்டிகள் நேற்று நடந்து. பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் துணை இயக்குனர் வைத்திய நாதன், உடற்கல்வி விரிவுரையாளர் ரவிக்குமார், உடற் கல்வி ஆசிரியர் பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் 1,200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
News November 17, 2025
ஏம்பலம்: ஜசம்மக்கள் மன்றத்தில் இணைந்த பாஜக துணை தலைவர்

புதுச்சேரி மாநிலம், ஏம்பலம் தொகுதியின், பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவரான ஜெயதீபன், இன்று சமூக ஆர்வலர் சார்லஸ் மார்டின் அலுவலகத்திற்கு நேரில் சென்று, தனது ஆதரவாளர்களுடன் JCM மக்கள் மன்றத்தில் இணைத்துக் கொண்டார். இதில் சமூக ஆர்வலர் சார்லஸ் மார்டின், JCM மக்கள் மன்றத்திற்கு நற்பெயரை பெற்று தர வேண்டும் என்று ஜெயதீபனுக்கு வாழ்த்துகளை கூறினார்.
News November 16, 2025
புதுச்சேரியில் கல்லூரி உதவி பேராசிரியர்கள் போராட்டம்

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வாயிலில், இன்று பல்வேறு அரசு கல்லூரிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள் தங்களுக்கு 15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


