News October 10, 2024
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் நலத்திட்டம்

காஞ்சிபுரம் அடுத்த மேல் ஒட்டிவாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்டம் முகாமில் 162 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதனை, காஞ்சி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கினர்.
Similar News
News December 7, 2025
காஞ்சியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு டிசம்பர் 8 அனைத்து காஞ்சிபுரம் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 149 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவிகள் நாளை பள்ளிகளுக்கு வர வேண்டாம் டிசம்பர் 9 முதல் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
News December 7, 2025
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்உறவு மைய கூட்ட அரங்கில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 8 காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
News December 7, 2025
காஞ்சிபுரம்: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!


