News March 17, 2024

வாலாஜாபேட்டை: பூட்டி சீல் வைப்பு

image

நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான தேதி இன்று(மாரச் 16) அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதை தொடர்ந்து வாலாஜாபேட்டை நகராட்சி சேர்மன் ஹரிணி தில்லையின் அறையை நகராட்சி பொறியாளர் சண்முகம் தலைமையில் ஊழியர்கள் பூட்டி சீல் வைத்தனர். தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்படும் வரை இந்த அறை பூட்டி வைக்கப்படும் என பொறியாளர் தெரிவித்தார்.

Similar News

News January 21, 2026

ராணிப்பேட்டையில் கூண்டோடு கைது!

image

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிறுத்தத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் நேற்று (ஜன.20) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சத்துணவு ஊழியர்களுக்கு கால வரை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை, அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

News January 21, 2026

ராணிப்பேட்டையில் கொடூரம்!

image

கிருஷ்ணாவரத்தில் நேற்று முன்தினம் (ஜன.19) இரவு அடையாளம் தெரியாத நபர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். விசாரணையில், அவர் செக்கடிகுப்பத்தை சேர்ந்த வெடிங் தொழிலாளி வேலு (40) என தெரியவந்தது. மேலும் உயிரிழந்த வேலு, வேறொரு பெண்ணுடன் பழகி வந்ததால் ஆத்திரத்தில் அப்பெண்ணின் கணவர் மற்றும் மகன் வேலுவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 21, 2026

ராணிப்பேட்டை: பெண்ணுக்கு எமனாய் வந்த வாகனம்!

image

வாலாஜாவை அடுத்த வன்னிவேடு, பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை இளம்பெண் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் பெண் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பெண் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த பெண் யார்? மோதிய வாகனம் யாருடையது? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!