News October 9, 2024

சாம்சங் போராட்டம்: CITU சார்பில் அவசர முறையீடு

image

சாம்சங் ஊழியர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் CITU சார்பில் அவரச முறையீடு செய்யப்பட்டுள்ளது. CITU சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்ட சாம்சங் போராட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பதால் காணவில்லை என்ற நிலையில் ஆட்கொணர்வு வழக்காக விசாரிக்க CITU கோரிக்கை விடுத்துள்ளது.

Similar News

News August 16, 2025

ராஜஸ்தான் பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயம்

image

மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தியை மத்திய அரசு திணிப்பதாகவும், சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்குவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், பாஜக ஆளும் ராஜஸ்தானில் Pre-KG, LKG, UKG வகுப்புகளில் சமஸ்கிருதம் கட்டாயம் என்ற நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளதாம். இதற்கு NCERT மற்றும் மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இது நடைமுறைக்கு வரும். உங்கள் கருத்து என்ன?

News August 16, 2025

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் காலமானார்

image

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் (62) உடல்நலக்குறைவால் காலமானார். ஆக.2 ஆம் தேதி குளியலறையில் விழுந்ததால் சோரனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், அவரின் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. அவரது மறைவிற்கு அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

News August 16, 2025

2026 தேர்தல்: திமுக ஆட்சியால் விசிகவுக்கு பின்னடைவா?

image

2021 வரை அதிமுக (மாநிலம்), பாஜகவுக்கு (மத்திய) எதிராக கடுமையான போராட்டங்களை விசிக முன்னெடுத்தது. ஆனால், திமுக ஆட்சி அமைத்த பிறகு வேங்கை வயல், கவின் ஆணவக்கொலை, தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் உள்ளிட்டவற்றில் மென்மையான போக்கையே விசிக கடைபிடித்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இது 2026 தேர்தலில் விசிக களமிறங்கும் தொகுதிகளில் நெருக்கடியை ஏற்படுத்தும் என்கின்றனர். உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!