News March 17, 2024

பள்ளி மாணவர்களுக்கு ஒருவாரம் கூடுதல் விடுமுறை..?

image

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்.19 நடைபெறவுள்ளதால், 1 -9ம் வகுப்புக்கு முன்னதாகவே இறுதித்தேர்வை முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வழக்கமாக ஜூன் 1 & 2ல் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், இந்த முறை ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6ம் தேதி முடிவுக்கு வருவதால், அதன்பின்பு ( ஒருவாரம் கூடுதல் லீவ்) பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளது.

Similar News

News October 20, 2025

சிறப்பான சேவையில் சென்னை மெட்ரோ முதலிடம்

image

பயணிகளுக்கு சிறப்பான சேவை அளிப்பதில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முதல் இடம் பிடித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. ‘கம்யூனிட்டி ஆப் மெட்ரோஸ்’ என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ள 32 நகர்ப்புற மெட்ரோ ரெயில் சேவைகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டு இதை அறிவித்துள்ளது. இந்த ஆய்வில் மெட்ரோ ரெயில் சேவையின் தரம், நம்பகத்தன்மை, பாதுகாப்பு, பயன்படுத்துவதற்கு எளிமை, சவுகரியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

News October 20, 2025

₹1 கோடி சம்பளம் வாங்கிய முதல் ஹீரோ இவரா?

image

இந்திய சினிமா இன்று பெரும் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், நடிகர்கள் கோடிகளில் சம்பளத்தை அள்ளுகின்றன. ஆனால் இந்தியாவில் முதன்முதலில் கோடியில் சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா? தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த சிரஞ்சிவிதான், முதலில் ₹1கோடி வாங்கி அமிதாப், ரஜினி உள்ளிட்ட நடிகர்களை பின்னுக்கு தள்ளினார். ஆபத்பந்தவுடு(1992) என்ற படத்திற்காக, சிரஞ்சீவி ₹1.25 கோடி சம்பளம் வாங்கினார்.

News October 20, 2025

இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!

image

தீப ஒளித் திருநாளில் நண்பர்கள், குடும்ப உறவுகளுக்கு வாழ்த்துகளை தவறாமல் பகிருங்கள். *மத்தாப்பு போல மனம் மகிழட்டும், பட்டாசு போல துன்பம் சிதறட்டும்.. இனிவரும் நாளெல்லாம் வாழ்வில் இன்ப ஒளி பரவட்டும். *அனைவர் வாழ்விலும் இருள் நீங்கி ஒளி பிறக்கவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விடவும் தீபாவளி வாழ்த்துகள். *அறியாமை இருள் நீங்கி அறிவுச் சுடரொளி பரவட்டும்! இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

error: Content is protected !!