News March 17, 2024
தஞ்சாவூர்: களத்தில் இறங்கிய பறக்கும் படை!

மக்களை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் அறிவிப்பு வெளியானது. இதை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேர்தல் பறக்கும் படை வாகனத்தினை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் நேற்று (மார்ச் 16) தொடங்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Similar News
News January 19, 2026
தஞ்சாவூர்: அமைச்சர் , எம்எல்ஏ விடுதலை – அதிரடி தீர்ப்பு

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், கும்பகோணம் துணை மேயர் தமிழழகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அவர்களை வழக்கில் இருந்து விடுவித்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
News January 19, 2026
தஞ்சாவூர்: போலீசார் அதிரடி – ஒருவர் கைது

தஞ்சாவூர், சாலியமங்கலம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை செய்வதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சோதனை மேற்கொண்டதில், சாலியமங்கலம் மேற்குதெருவை சேர்ந்த சிலம்பரசன்(37) என்பவர், மது விற்பனை செய்வதாக தெரிய வந்தது. இதையெடுத்து அவரிடம் விசாராணை மேற்கொண்டு, 481 மதுபாட்டிகள் பறிமுதல் செய்து, கைது செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் 1622 பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
News January 19, 2026
தஞ்சாவூர்: இனி Gpay, Phonepe தேவையில்லை!

தஞ்சாவூர் மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க.


