News October 8, 2024
ஜனநாயகத்தின் அடையாளம்: பாராட்டிய பிரதமர் மோடி

ஜம்மு- காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் மிகச் சிறப்பானது என்று தெரிவித்து இருக்கிறார் பிரதமர் மோடி. சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35(A) ரத்துசெய்யப்பட்ட பின் நடந்த முதல் தேர்தலில் மக்கள் பெருவாரியாக வாக்களித்துள்ளனர். இது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுகிறது. இதற்காக ஜம்மு- காஷ்மீரிகள் ஒவ்வொருவரையும் பாராட்டுகிறேன் என்று மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
Similar News
News August 16, 2025
CM தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள்? உண்மை என்ன?

CM ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் இருப்பதாக பாஜக MP அனுராக் தாக்கூர் கூறியது பொய்யான தகவல் என TN Fact Check விளக்கம் அளித்துள்ளது. பாஜக MP கூறிய அவென்யூ எண் 11 என்பது தனி வீடல்ல, அது அடுக்குமாடி குடியிருப்பு எனவும், 30 வாக்காளர்கள் வெவேறு வீடுகளில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், அங்கு முஸ்லிம் மட்டுமல்ல, அனைத்து மதத்தினரும் வசிப்பதாகவும் கூறியுள்ளது.
News August 16, 2025
இனி அந்த மாதிரி கேரக்டரில் நடிக்க மாட்டேன்: அனுபமா

‘தில்லு ஸ்கொயர்’ தெலுங்கு படத்தில் அதிக கிளாமர் காட்டியதால், எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டதாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதீத கவர்ச்சி தனக்கு பிடிக்கவில்லை என்றாலும், கதைக்கு தேவைப்பட்டதால் நடித்ததாகவும், அது தன்னுடைய ரியல் கேரக்டருக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இனி இதுபோன்ற படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 16, 2025
ஆக.22-ல் தமிழகம் வரும் அமித்ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 22-ம் தேதி தமிழகம் வரவிருக்கிறார். நெல்லையில் நாளை(ஆக.17) நடைபெற இருந்த பாஜக பூத் முகவர்கள் மாநாடு, நாகலாந்து கவர்னர் இல.கணேஷன் மறைவையடுத்து வரும் 22-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதில் கலந்துகொள்ளவே அமித்ஷா வருகை தர உள்ளார். முன்னதாக, கடந்த ஜூன் மாதம் மதுரையில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அவர், இனி ஒவ்வொரு மாதமும் தமிழகம் வரவிருப்பதாக கூறியிருந்தார்.