News October 8, 2024
₹50 கோடி மதிப்புள்ள நிலத்தை போராடி மீட்ட கவுண்டமணி

சென்னை ஆற்காடு சாலையில் உள்ள ₹50 கோடி மதிப்பிலான தனது சொந்த நிலத்தை நடிகர் கவுண்டமணி 20 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி மீட்டுள்ளார். கடந்த 1996ல் கவுண்டமணி இந்த நிலத்தை வாங்கிய நிலையில், வணிக வளாகம் கட்ட தனியார் நிறுவனம் அந்த நிலத்தை கையகப்படுத்த முயன்றது. உச்சநீதிமன்றம் வரை சென்று கவுண்டமணி நிலத்தை மீட்டதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்கள் அங்கிருந்து தற்போது வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Similar News
News August 7, 2025
திமுகவில் ஐக்கியமான அதிமுக மாவட்ட நிர்வாகி!

கரூர் மாவட்ட அதிமுக விவசாய பிரிவு செயலாளர் பாலமுருகன், ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் பொன் அழகிரி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகி தமிழ் செல்வன் உள்ளிட்ட 50 பேர் திமுகவில் இணைந்தனர். நேற்று இரவு, ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் இந்த இணைப்பு நடைபெற்றது. கரூரில் செந்தில் பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவரும் மாறி மாறி மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைத்து வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
News August 7, 2025
கிழிந்த உடையுடன் காலேஜ் சென்றேன்: நடராஜன் உருக்கம்

தனக்கு படிப்பு அவ்வளவாக வராது, தெரிந்த ஒரே விஷயம் கிரிக்கெட் மட்டுமே என நடராஜன் தெரிவித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் கிடைக்கும் பணத்தை வைத்து தான் கல்லூரி ஃபீஸ் கட்டியதாகவும், சில சமயங்களில் சரியான சாப்பாடு இல்லாமல், கிழிந்து உடையுடன் கல்லூரிக்கு சென்றதாகவும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், கடினமான உழைத்தால் முன்னேற முடியும் என்பதற்கு தானும் ஒரு உதாரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
News August 7, 2025
ஸ்டன்னிங் லுக்கில் ராஷி கண்ணா

ஸ்டைலிஷ் உடையில் லேட்டஸ்ட்டாக எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். வெண்ணிற உடையில் ஸ்டன்னிங் லுக்கில் கலக்கும் அப்புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. இந்திய அளவில் பிரபலமான ராஷி கண்ணா, ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ‘அரண்மணை 3’ படத்தில் வரும் ‘அச்சோ அச்சோ அச்சச்சோ’ பாடலில் கிளாமர் காட்டி பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸானார்.