News October 8, 2024
வேலூர் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் போதை பழக்கத்திற்கு எதிராக மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 9, 2025
வேலூர்: உதவி தொகை பெற விண்ணப்பம்.. கலெக்டர் தகவல்!

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகபிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவ/மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI Postmatric Scholarship) திட்டத்தின் கீழ் பயன்பெற https://umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்தார்.
News December 9, 2025
வேலூர்: ரேஷன் கார்டில் பிரச்னை? கலெக்டர் அறிவிப்பு!

வேலூர் மாவட்டத்தில் வரும் டிச.13ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறவுள்ளது. இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதனையும் தெரிவிக்கலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
வேலூர்: கட்டட தொழிலாளி கொலை!

வேலூர்: சதுப்பேரி பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பிரேம்குமார் (34). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தந்தை கோட்டீஸ்வரன் (54), மகன் சக்தி (24) ஆகியோருக்கும் இடையே நேற்று(டிச.8) கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (டிச.9) ஆர்.என்.பாளையம் பஜார் வீதியில் பிரேம்குமாரை தந்தை, மகன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


