News October 8, 2024
முதல்வராகிறார் உமர் அப்துல்லா

உமர் அப்துல்லா ஜம்மு – காஷ்மீர் முதல்வராவார் என தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் தங்களுக்கு வழங்கியுள்ளதாகவும், மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்வோம் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜம்மு & காஷ்மீரில் காங்.- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
Similar News
News August 7, 2025
தென்காசி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோயில் ஆடித்தபசு திருவிழாவையொட்டி இன்று(ஆக.7) தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். இதனால், அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இன்று இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் 23-ம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News August 7, 2025
8 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

வட தமிழகத்தின் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. அதேபோல், கோவையின் மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
News August 7, 2025
‘கிங்டம்’ படத்திற்கு போலீஸ் பாதுகாப்பு?

தமிழகத்தில் ‘கிங்டம்’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிய வழக்கில் காவல்துறை, நாதக பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இப்படத்தில் ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தியதாக சர்ச்சை எழுந்ததால் நாதக போராட்டத்தை அறிவித்தது. இதையடுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டை அணுகியது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கருத்துரிமை உண்டு என கூறி, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.