News March 17, 2024
நூல் விலை ரூ.10 வரை உயர்வு

நூற்பாலைகள் நூல் விலையை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது தொழில்துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பஞ்சு, நூல் விலை உயர்வால் ஜவுளித் தொழில் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன என்று குற்றம் சாட்டிய ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம், நூல் விலையை உடனே குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
Similar News
News July 6, 2025
நடிகை கைலி பேஜ் மரணம்.. போதை மருந்து காரணமா?

ஆபாச படங்களில் நடித்து பிரபலமடைந்த இளம் நடிகை கைலி பேஜ்(28) கடந்த 3-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் சடலமாக கிடந்தார். 2016 முதல் 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட இவருக்கு பலரும் இரங்கல் கூறி வருகின்றனர். இந்நிலையில், TMZ சினிமா வலைத்தள தகவலின்படி அவர் அளவுக்கு அதிகமாக போதை மருந்து எடுத்ததே உயிர்போக காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. Say no to drugs
News July 6, 2025
3 நாள் STOP பண்ணுங்க… அதிசயம் நடக்கும்!

தொடர்ந்து ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் ஒரு 3 நாள்களுக்கு, போன் பயன்படுத்துவதை நிறுத்தினால், ஆச்சரியகரமான மாற்றம் ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளைஞர்கள் சிலரை 72 மணிநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை நிறுத்தி சோதித்தனர். அப்போது அவர்களின் மூளை அதிசயிக்கத்தக்க முறையில் தன்னைத் தானே ரீபூட் செய்துகொண்டு சிறப்பாக செயல்பட்டதை கண்டறிந்தனர். நீங்களும் ட்ரை பண்ணலாமே?
News July 6, 2025
நக்சல்கள் எங்கள் தோழர்களே: திருமாவளவன் பேச்சு

மக்களின் உரிமைக்காக போராடும் நக்சல்கள் எங்கள் தோழர்கள்தான் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர்கள் குரலற்றவர்களுக்கான குரல் என தெரிவித்த அவர், நக்சல் தனிப்பட்ட லாபத்திற்காக போராடுவதில்லை எனவும் கூறியுள்ளார். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் மத்திய இந்தியாவின் பிற வனப்பகுதிகளில் ஆயுதமேந்திய இயக்கங்களைக் குறிப்பிட்டு திருமா இவ்வாறு பேசியுள்ளார்.