News October 8, 2024

திருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

image

மன்னார்குடி கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் அக்டோபர் 10 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 11 மணிக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை எழுத்து பூர்வமாக அளிக்கலாம். எனவே இந்த வாய்ப்பை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 14, 2025

மன்னார்குடியில் சாலை மறியல் அறிவிப்பு

image

மன்னார்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், எள், பருத்தி, உளுந்து, போன்றவற்றிற்கு காப்பீட்டுக்கான இழப்பீட்டு தொகையை வழங்காமல் இன்சூரன்ஸ் நிறுவனம் இழுத்தடிப்பு செய்து வருவதை கண்டித்து செப்.16-ந் தேதி மன்னார்குடி கீழப்பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் எம்.பி வை.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News September 14, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவல் விவரங்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News September 13, 2025

திருவாரூர்: ஆயில் நிறுவனத்தில் சூப்பர் வேலை!

image

திருவாரூர் மக்களே.. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Engineer/ Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து செப்.28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!