News October 8, 2024
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இருவர் கைது

சிவகாசி வெம்பக்கோட்டை சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த சரஸ்வதி பாளையத்தை சேர்ந்த ராஜபாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் நதிக்குடியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த சூரிய பிரகாஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவருக்கும் கஞ்சா சப்ளை செய்யும் நபர்களை தேடி வருகின்றனர்.
Similar News
News January 13, 2026
ஸ்ரீவி அருகே பழிக்கு பழியாக கொலை முயற்சி

கூமாபட்டி ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருக்கும், அவரது அண்ணன் குருவையாவுக்கும் ஏற்பட்ட சொத்து பிரச்சினையில் குருவையா மகன் வீரகுருவை கடந்தாண்டு பாலசுப்பிரமணியனின் மகன் வீரபாண்டி, மருமகன் முனியசாமி சேர்ந்து கொலை செய்தனர். இதையடுத்து பொங்கல் பரிசு வாங்க சென்றபோது பாலசுப்பிரமணியத்தை குருவையா மகன் சஞ்சய்குமார் அருவாளால் வெட்ட முயன்ற நிலையில் கூமாபட்டி போலீசார் அவரை கைது செய்தனர்.
News January 13, 2026
ராஜபாளையம்: ஆபாச வீடியோ அனுப்பிய போலீஸ்காரர்

ராஜபாளையத்தை சேர்ந்த 33 வயது பெண்ணின் கணவர் புகார் அளிப்பதற்காக புளியங்குடி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த காவலர் ஒருவர் அவரின் செல்போனை பறித்து அப்பெண்ணின் செல்போன் எண்ணிற்கு 29 ஆபாச வீடியோக்கள், ஆபாச குறுச்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பெண் கலெக்டரிடம் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News January 13, 2026
பெருமாள் அலங்காரத்தில் காட்சியளித்த ஆண்டாள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரசித்தி பெற்ற மார்கழி நீராட்டு விழா டிச. 20-ம் தேதி பச்சை பரப்புதல் வைபவத்துடன் தொடங்கியது. இதில் பகல் பத்து, ராப்பத்து உற்சவம் முடிந்த நிலையில், எண்ணெய் காப்பு உற்சவம் ஜன.8 அன்று தொடங்கியது. இந்நிலையில் ஐந்தாம் நாளான இன்று திருமுக்குளம் தெப்பத்தின் மேற்கு கரையில் உள்ள எண்ணெய் காப்பு மண்டபத்தில் முத்தங்கி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


