News March 17, 2024
கட்டுப்பாட்டு மையத்தினை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு

புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பதற்கு ஏதுவாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு மையத்தினை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், மா.தேர்தல் அதிகாரி அ.குலோத்துங்கன், துணை தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
Similar News
News October 16, 2025
தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கிய முதல்வர்

புதுச்சேரி, திலாசுபேட்டை தொகுதியில் தீபாவளி பரிசு தொகுப்பாக ரூ.585 மதிப்புள்ள 2-கிலோ சர்க்கரை, 2-கிலோ சூரியகாந்தி எண்ணெய், 1-கிலோ கடலைப்பருப்பு, ரவை, மைதா அரைக்கிலோ என தீபாவளி தொகுப்பை பொதுமக்களுக்கு மாநில முதல்வர் ரங்கசாமி வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் திருமுருகன், அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், அரசு செயலர் முத்தம்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
News October 16, 2025
புதுச்சேரி: EXAM இல்லை..வேலை ரெடி!

புதுவை மக்களே, இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <
News October 16, 2025
புதுச்சேரி: மனைவி கண்டித்ததால் தற்கொலை

தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் மனோகர் (48), மனைவி கிருஷ்ணகுமாரி இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். மனோகருக்கு மதுபழக்கம் இருந்ததால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இந்நிலையில் மனோகர் குடித்து விட்டு வந்ததை மனைவி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்து வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.