News March 17, 2024
நாட்றம்பள்ளியில் கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள பல்வேறு கட்சி கொடிக் கம்பங்கள் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதை தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் நேற்று இரவு பேருந்து நிலையத்தில் இருந்த அதிமுக,திமுக,பாஜக உள்ளிட்ட கட்சி கொடிக் கம்பங்களை வருவாய் துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
Similar News
News August 14, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 14) இரவு ரோந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட போலிஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணிகள் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
News August 14, 2025
மூவர்ணக் கொடி அலங்காரத்தில் ஆட்சியர் அலுவலகம்

இந்திய நாடு முழுவதும் நாளை (15.08.2025) சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து தளங்களும் மின்விளக்கு அலங்கரிக்கப்பட்டு ஆரஞ்சு, வெள்ளை, பச்சை உள்ளிட்ட மின்விளக்குகள் இரவு நேரத்தில் ஜொலித்து வருகிறது. இதனை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
News August 14, 2025
திருப்பத்தூரில் பலத்த பாதுகாப்பு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட்15) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் ஆயுதப்படை மைதானத்தில் தேசிய கொடியேற்றுகிறார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடிய இடங்களில் மாவட்ட எஸ்பி தலைமையில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 511 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் செளமியா தெரிவித்தார்.