News October 7, 2024
கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையாலும், ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறப்பாலும், கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 459 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 655 கன அடியானது. அணையின் இடது மற்றும் வலது புற கால்வாய் மூலம் பாசனத்திற்காக விநாடிக்கு 178 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 26, 2025
கிருஷ்ணகிரி: பேருந்தில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு…

கிருஷ்ணகிரி மக்களே, அரசு பேருந்தில் நடத்துனர் உங்களை மரியாதை குறைவாக நடத்தினாலோ, சரியான சில்லறை வழங்கவில்லை என்றாலோ, உங்கள் பகுதியில் பேருந்து நிற்காமல் சென்றாலோ, பேருந்து கால தாமதமாக வருகிறது என்றாலோ (அ) லக்கேஜை பேருந்தில் மறந்து விட்டாலோ இனி கவலை வேண்டாம். இந்த எண்ணில் (1800 599 1500) உங்கள் குறைகளை புகார் செய்யலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
News August 26, 2025
கிருஷ்ணகிரியில் இறந்த பின்னும் வாழும் சிறுவன்!

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அடுத்த பாரத கோவிலை சேர்ந்தவர்கள் தேவேந்திரன், இவரது மனைவி ஜமுனா. இவர்களின் மகன் கோவில்கனி (8). உடல் நலக்குறைவால் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கடந்த 21ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அவரின் கண்களை தானமாக அளிக்க பெற்றோர் முன்வந்தனர். இவரது கண்கள் பெறப்பட்டு, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.
News August 26, 2025
கிருஷ்ணகிரியில் புதிய தொழில் பயிற்சி நிறுவனத் தொடக்கம்

கிருஷ்ணகிரி அவதானப்பட்டியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, 35 மாணவ மாணவிகளுக்கு சோ்க்கை ஆணையை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் நேற்று (ஆகஸ்ட் 25) வழங்கினாா்.