News March 17, 2024
வாக்காளர் பட்டியலில் சேர இன்றே கடைசி நாள்

18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று (மார்ச் 17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 6.19 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றாலும் கூட தற்போது விண்ணப்பிக்கலாமென தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
Similar News
News November 3, 2025
தைவானை சீனா ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது: டிரம்ப்

சமீபத்தில் தான் டிரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்று, அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகம் செய்வதில் ஒரு புரிதல் ஏற்பட்டது. இந்நிலையில், தைவானை சீனா ஆக்கிரமித்தால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பேட்டி ஒன்றில், தான் அதிபராக இருக்கும் வரை சீனா தைவானை ஆக்கிரமிக்காது என்றும், சீன அதிபர் விளைவுகள் பற்றி நன்றாக புரிந்து வைத்துள்ளார் எனவும் கூறினார்.
News November 3, 2025
SIR-க்கு எதிராக SC-யில் திமுக இன்று மனு தாக்கல்

SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் திமுக இன்று மனு தக்கல் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று திமுக சார்பில் நடந்த அனைத்து கட்சிக்கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கையை நிறுத்திவைக்க வேண்டும் என CM ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்கிறது.
News November 3, 2025
FLASH: புதிய குண்டை வீசிய செங்கோட்டையன்

திமுகவில் மட்டுமல்ல, அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருப்பதாக செங்கோட்டையன் புதிய குண்டை வீசியுள்ளார். அதிமுகவில் மகன், மைத்துனர், மாப்பிள்ளை தலையீடு அதிகமாக உள்ளதாக இபிஎஸ் பெயரை குறிப்பிடாமல் கடுமையாக சாடினார். மேலும், தன்னால் முடியாததை முடியும் எனச் சொல்லி தன்னையும் மற்றவர்களையும் ஏமாற்றக் கூடாது எனவும் விமர்சித்தார். செங்கோட்டையனின் இந்த தாக்குதல் அரசியலில் புயலை கிளப்பும் என கூறப்படுகிறது.


