News March 17, 2024
வாக்காளர் பட்டியலில் சேர இன்றே கடைசி நாள்

18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று (மார்ச் 17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 6.19 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றாலும் கூட தற்போது விண்ணப்பிக்கலாமென தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
Similar News
News April 19, 2025
இளைஞரை நிர்வாணப்படுத்தி வண்டியில் கட்டி சித்ரவதை

உ.பி.யில் இளைஞரை நிர்வாணப்படுத்தி மாட்டு வண்டியில் கட்டி இழுத்து சென்று கிராம மக்கள் சித்ரவதை செய்துள்ளனர். விஷேஷ்வர்கஞ்சில் 22 வயது இளைஞர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பிடித்து சென்ற மக்கள், ஆடையை களைந்து நிர்வாணப்படுத்தி வண்டியில் கட்டி இழுத்து சென்றனர். அப்போது அவரை சிலர் கடுமையாகத் தாக்கினர். அவரின் சகோதரி அளித்த புகாரின்பேரில் போலீஸ் விசாரிக்கிறது.
News April 19, 2025
200 சிக்சர்கள்.. கே.எல். ராகுல் சாதனை

IPLஇல் டெல்லி கேபிடல்ஸ் வீரர் கே.எல். ராகுல் 200 சிக்சர்களை விளாசி சாதனை படைத்துள்ளார். குஜராத் டைடன்ஸ்க்கு எதிராக இன்று நடந்த போட்டியில் அவர் சிக்சர் விளாசினார். இதன்மூலம் 200 சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியலில், அவர் இடம்பிடித்தார். அதாவது, 200 சிக்சர்கள் விளாசிய 6ஆவது இந்தியர், 11ஆவது சர்வதேச வீரர் என்ற பெருமையை பெற்றார். எனினும், 14 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
News April 19, 2025
தோனி, படுகோனேவுக்கு நாமம் போட்ட BluSmart?

EV வாடகை கார் சேவை நிறுவனமான <<16128336>>BluSmart<<>> தனது செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதன் இணை நிறுவனர் அன்மோல் ஜக்கி, முதலீட்டாளர்கள் நிதியை மோசடி செய்ததாக SEBI குற்றஞ்சாட்டிய நிலையில், BluSmart-ன் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிறுவனத்தில் கடந்த 2019-ல் தீபிகா படுகோனே $30 லட்சம் முதலீடு செய்தார். அதேபோல், தோனியின் குடும்ப நிறுவனம் உள்பட 3 நிறுவனங்கள் $2.4 கோடி முதலீடு செய்தன.