News October 7, 2024
5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

வங்ககடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது தெற்கு ஆந்திரா – வடதமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு – தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று(அக்.7) முதல் அக்.11 வரை விருதுநகர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE IT
Similar News
News August 25, 2025
கடன் தொல்லையால் ஓட்டுநர் தற்கொலை

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்த பாண்டி(33) டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி சிவகாசியில் உள்ள ஒரு அச்சகத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். டிரைவர் பாண்டி குடும்ப செலவுக்காக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதியடைந்து வந்த நிலையில் மன உளைச்சலில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News August 24, 2025
BREAKING சாத்தூர் அருகே விபத்தில் 35 பேர் காயம்

கழுகுமலை பகுதியைச் சேர்ந்த 20 குழந்தைகள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் இருக்கன்குடிக்கு மொட்டை எடுப்பதற்காக சென்று விட்டு ஊர் திரும்பியுள்ளனர். அப்போது கோவில்பட்டி – நல்லி சத்திரத்திற்கு இடையே நெடுஞ்சாலையில் டயர் வெடித்து வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குழந்தைகள் உட்பட 35 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் கோவில்பட்டி, தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News August 24, 2025
விரைவில் திறக்கப்பட உள்ள புதிய கட்டிடம்

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை அண்மையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்காக இந்த மருத்துவமனை வளாகத்தில் ரூ.34 கோடி மதிப்பில் 6 தளங்களுடன் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் கடந்த 20230ம் ஆண்டு துவங்கியது. இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. விரைவில் இந்த கட்டடம் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.