News March 17, 2024
17 மாலுமிகளை பத்திரமாக மீட்டது இந்திய கடற்படை!

அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் வர்த்தக கப்பல் கடத்தல் முயற்சியை இந்தியக் கடற்படை போர்க்கப்பல் முறியடித்துள்ளது. சோமாலியா கடற்பகுதியில் சென்ற எக்ஸ் எம்.வி ரூவென் என்ற வர்த்தக கப்பலில் பிடித்த கொள்ளையர்கள் 17 மாலுமிகளை சிறைபிடித்தனர். தகவலறிந்து விரைந்த இந்தியாவின் ஐ.என்.எஸ் கோல்கட்டா போர்க்கப்பல், வர்த்தக கப்பலைச் சுற்றிவளைத்து எச்சரிக்கை விடுக்கவே, 35 கடற்கொள்ளையர்களும் சரணடைந்துள்ளனர்.
Similar News
News October 30, 2025
கரூரில் தவெகவினர் தாக்கப்பட்டனர்: CTR

கரூர் துயரம் நடந்த முதல் நாளே தானும், N.ஆனந்த் உள்ளிட்ட அனைவரும் கரூருக்கு வெளியே காத்திருந்ததாக CTR நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், போலீஸார் தங்களை அனுமதிக்கவில்லை என்றும், தவெக கொடி கட்டிய வாகனங்களுக்கு ஊருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது எனவும் கூறினார். அத்துடன், அனைத்து தவெக நிர்வாகிகளும் தாக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 30, 2025
அக்டோபர் 30: வரலாற்றில் இன்று

*1502 – வாஸ்கோடகாமா 2-வது முறையாக கோழிக்கோடு வந்தார்.
*1945 – ஐநாவில் இந்தியா இணைந்தது.
*1908 – தேவர் ஜெயந்தி.
*1966 – ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான KV ஆனந்த் பிறந்தநாள்.
News October 30, 2025
ஜெயிலர் 2-ல் இணைந்த சந்தானம்

காமெடியனாக கலக்கிய சந்தானம், தற்போது ஹீரோவாகவே நடித்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் காமெடியனாக அவர் நடிக்கவுள்ளார். ‘ஜெயிலர் 2’ மூலமே மீண்டும் அந்த என்ட்ரியை சந்தானம் கொடுக்கவுள்ளார். ரஜினிகாந்த் உடன் ஏற்கெனவே ‘லிங்கா’ படத்தில் சந்தானம் காமெடி ரோலில் நடித்திருந்தார். இந்த காம்போ மீண்டும் திரையில் சிரிப்பு பட்டாசாய் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


