News October 6, 2024

கள்ளக்குறிச்சியில் 48 வாகனங்கள் பறிமுதல்

image

கள்ளக்குறிச்சி பகுதிகளில் இரவு நேரங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் நேற்று இரவு நேரங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஓட்டுனர் உரிமம், ஆர்சி புத்தகம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் என போக்குவரத்து விதிகளை மீறியதாக 48 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்தனர்.

Similar News

News September 9, 2025

கள்ளக்குறிச்சி: மின் தடையா…? இதை பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE

News September 9, 2025

கள்ளக்குறிச்சி: டிகிரி படித்திருந்தால் 1,25,000 வரை சம்பளம்

image

கள்ளக்குறிச்சி மக்களே மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்ரேஷன் நிறுவனம், (கள பொறியாளர்) போல பதவிகளுக்கு 1,543 காலிப்பணியிடங்கள் அறிவித்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 18வயதுக்கு மேல் இருந்து ENGINEERING அல்லது DILPLOMO ELECTRICAL முடித்திருக்க வேண்டும். எழுத்து வடிவில் தேர்வும் உண்டு இந்த பணிக்கு 1,25,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம் ஷேர்.

News September 9, 2025

கள்ளக்குறிச்சி: கார் மோதி முதியவர் பலி

image

மடப்பட்டு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று 60 மதிக்கத்தக்க முதியவர் சாலையை கடந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அவ்விபத்தில் முதியவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மடப்பட்டு வி.ஏ.ஓ. சவரிநாதன் அளித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!