News October 6, 2024
அடுத்த ஷாக்: ₹1,814 கோடியில் போதைப்பொருள்

ம.பி. தலைநகரம் போபாலில் ₹1,814 கோடி மதிப்பிலான போதைப்பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் குஜராத் தீவிரவாத தடுப்பு படை இணைந்து மேற்கொண்ட சோதனையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, கடந்த 2ஆம் தேதி டெல்லியில் ₹5,600 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
Similar News
News August 21, 2025
ஓசி என ஏளனம் செய்யும் திமுக அமைச்சர்கள்: CTR நிர்மல்

விஜய்க்கு அனுபவம் இல்லை எனக் கூறும் திமுக அமைச்சர்கள் மக்களை ஓசி என ஏளனம் செய்வதாக CTR நிர்மல்குமார் கூறியுள்ளார். நேர்மையானவர்களை அரசியலில் நுழைய விடாமல் திராவிட கட்சிகள் மக்களை சுரண்ட நினைப்பதாக கடுமையாக விளாசிய அவர், திராவிடம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் கும்பலுக்கு வரும் தேர்தல் முடிவு கட்டும் என கடுமையாக சாடியுள்ளார்.
News August 21, 2025
தவெக யாருடன் கூட்டணி.. மாநாட்டில் விஜய் அறிவிப்பு

2026 தேர்தலில் DMK- TVK இடையேதான் போட்டி என விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது. அப்படி இருக்கும்போது, TVK எப்படி ஒட்டும் என்றார். மேலும், நேரடி அடிமை கூட்டணியுடன் ஒருபோதும் தவெக இணையாது என்றார். மேலும், MGR ஆரம்பித்த ADMK, தற்போது பொருந்தா கூட்டணியில் சிக்கி தவிப்பதாக அதிமுகவையும் சாடினார். விஜய்யின் கூட்டணி முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.
News August 21, 2025
மாநாட்டுக்கு தடைகளை ஏற்படுத்திய அமைச்சர்: ஆதவ்

மதுரை தவெக மாநாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி பல தடைகளை ஏற்படுத்தியதாகவும், அவை அனைத்தையும் உடைத்தெறிந்து மாநாட்டை நடத்தி காட்டியுள்ளதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். உண்மையை சொன்னதால் அமைச்சரவையில் இருந்து பிடிஆர் ஓரங்கட்டப்பட்டார் எனக்கூறிய அவர், மதுரையில் தற்போது ஆதிக்கம் செலுத்தும் அமைச்சர் மூர்த்தி சமூகநீதி காவலரா?, அவரை ஏன் திமுக ஆதரிக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.