News October 6, 2024
தஞ்சை மாவட்ட தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை

தஞ்சை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக தமிழுக்கு தொண்டாற்றி வரும் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.4000 உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 58 வயது நிறைவடைந்து, ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள் இருக்கும் தமிழறிஞர்கள், தாசில்தார் அலுவலகம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 14) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 14, 2025
தஞ்சையில் ரூ.5 லட்சம் இலவச காப்பீடு: Apply பண்ணுங்க!

தஞ்சை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களோடு மருத்துவ அடையாள அட்டையை உடனே பதிவு செய்து பெற முடியும். மேலும் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து வாங்கலாம்.SHARE IT NOW
News August 14, 2025
தஞ்சை வந்தடைந்த 2736 டன் உரங்கள்

தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்குத் தேவையான உரம் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகள் மற்றும் சரக்கு ரயில்களில் கொண்டு வரப்படுகிறது. அதன்படி ஒடிசாவில் இருந்து சரக்கு ரயிலின் 29 வேகன்களில் 1,800 டன் காம்ளக்ஸ், டி.ஏ.பி. உரம் தஞ்சை ரயில் நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. இதேபோல் சென்னையில் இருந்து 936 டன் யூரியா உரம் தஞ்சை ரயில் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது.