News March 16, 2024
நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா பெறலாம்!

சேலம் மாநகராட்சியில் நகர நிலவரித் திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலம் வட்டம், சேலம் மேற்கு மற்றும் தெற்கு ஆகிய வட்டங்களை சார்ந்த நில உரிமையாளர்கள் இணையதளம் வழியாக பட்டாவிற்கு விண்ணபிக்கலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி இன்று தெரிவித்துள்ளார். மக்கள் பத்திர பதிவு ஆவணங்களை கொண்டு நகர நிலவரித்திட்ட அலகு 1,2,3 மற்றும் 4ல் தனி வட்டாட்சியர் வழியாக பட்டா பெறலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News April 9, 2025
சேலத்தில் நாளை மதுக்கடைகள் இயங்காது!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, நாளை (ஏப்ரல் 10) சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News April 9, 2025
மாம்பழம் படைத்தால்.. திருமணம் நடக்கும்!

சேலம் மாவட்டம் குமரகிரியில் அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் கையில் தண்டத்துடன் குபேர திசையை (வடக்கு) நோக்கியபடி தண்டபாணி அருளுகிறார். இத்தலம், தியானம் செய்வதற்கு ஏற்ற அமைதியான தலமாக திகழ்கிறது. மேலும், இங்கு தண்டாயுதபாணிக்கு மாம்பழம் படைத்து வணங்கிட புத்திர பாக்கியம் கிட்டும், தடைபட்ட திருமணங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 9, 2025
மேச்சேரி ராணுவ வீரர் மரணம்- சோகத்தில் மக்கள்!

சேலம் மாவட்டம், மேச்சேரி மல்லிகுந்தம் பகுதியை சேர்ந்த கோகுல் சக்தி (21) இந்திய ராணுவத்தில் அக்னி பார் திட்டத்தின் கீழ் சேர்ந்து கடந்த 11 மாதமாக ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் திடீரென இறந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறப்புக்கான காரணம் தெரியவில்லை எனவும், உடல் வந்த பிறகு தான் காரணம் தெரியும் என குடும்பத்தினர் தகவல்!